தமிழகத்தில் அரிசியை உலையில் போடும் முன் நீரால் கலைவார்கள்
(தூய்மையாக்குதல் - சிறுகல், களிமண் மற்றும் பிற நீக்குதல்). பின் கலைந்த நீரில் கறிகாய்களை
கழுவி அரிவார்கள். புழு பூச்சியுள்ள கறிகாய்களை அந்த நீரில் போட்டு, அதை வெளியே வீசாமல்,
ஒரு மட்பாண்ட்த்தில் ஊற்றி பாதுகாப்பர். அரிசி பொங்கியவுடன் வடிகட்டி சாதமாக உண்பர்.
வடிகட்டிய நீரை (கஞ்சி) நீராகரமாகவும் பருகுவர்.
ஒருவேளை/நாளில் மிகுந்த உணவுகளையும், கஞ்சியையும் அம்மட்பாண்ட்த்தில் சேமிப்பர்.
மந்தைசென்று இல்லம் திரும்பும் கால்நடைகளுக்கு மட்பாண்ட்த்தில்
சேமித்த கழுனீரை உணவாக தருவர்.
இவ்வாறு, கழுனீரையும் ஒரு உணவாக உண்ட கால்நடைகள் எருவாக (சாணம்)
நம் கழனிகளுக்கு (வயல்) இயற்கை மருந்தாக விளைநிலத்திற்கு வருகிறது.
இது ஒரு சுழற்சி. நவீன விஞ்ஞானத்தில் நியூட்டனின் மூன்றாம் விதி.
இவ்வழக்கத்தினால்,
தமிழர்கள் பல உண்மைகளை மறைமுகமாக உணர்த்துகிறார்கள். அவை,
1.
நீர்
மேலாண்மை - அரிசி, பருப்பு கழுவிய நீரை வீணாக்காமல், கறிகாய்களையும் கழுவி கால்நடைகளுக்கு உணவாக்கினர்.
2.
கஞ்சியையும் கழுனீருடன் கலந்து நல்ல கால்நடைகளுக்கு சத்துணவாக்கினர்.
(நவீன உலகில் குக்கரில் சமைப்பதால் அரிசியில் உள்ள சத்துக்கள் மனிதன் ஒருவனே உட்கொள்கிறான்.)
3.
இயற்கை வேளாண்மை - கால்நடைகள் வெளியேற்றும் கழிவுகளை (சாணம்,
கோமியம்) விளைநிலங்களுக்கு உரமாக்கினான். கோமியத்தை கிருமி நாசினியாகவும் மனிதன் பயன்படுத்தினான்.
4.
சாணத்தை இல்லத்தின்
தரையில் (அகம் & புறம்) தெளித்து கொசு, பூச்சி மற்றும் பிற அண்டாவண்ணம் தன் உடல்நலத்தையும்
பாதுகாத்தான். சாணம் தெளித்த மண் தரை வெயிலில் குளுமையையும், கார்காலத்தில் கொசுக்கள்
வரமாலும் தடுத்தன.
5.
பாத்திரம்/துணி துவைத்த
அசுத்த நீரை பாத்திகட்டி தன் தோட்டத்துக்கு பாய்ச்சினான். தோட்டத்து விளைபொருளை உண்பது
மூலம் நஞ்சையும் அமிர்தமாக்கினான்.
தேவைக்கு
மிகுதியான நவீனம், வணிகமயாக்கம், தொழில் வளர்ச்சி மற்றும் பல மூலம் நாம் இழந்த்து அதிகம்,
பெற்றது குறைவு.
வேண்டுகோள்
: பதிவை படித்தவர்கள் பிழையிருப்பின் தெரிவிக்கவும். முடிந்தளவு பகிரவும்.
நன்றி.
தாங்களும் தங்கள் கருத்துக்களை பகிர்வதன் மூலம் நன்மை நமக்கே.
No comments:
Post a Comment